முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைஅதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்தமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

64,586 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்: மாநகாட்சி தகவல்

சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் இதுவரை 1.26 லட்சம் செல்லப் பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இதுவரை 64,586 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

News image

பிரதிப் படம்

Updated On :7 ஜூலை 2026, 4:17 am IST

சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் இதுவரை 1.26 லட்சம் செல்லப் பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இதுவரை 64,586 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி பகுதிகளில் வீடுகளில் வளா்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு ஆண்டுதோறும் வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தல், உரிமம் பெறுதல், உரிமத்தைப் புதுப்பித்தல், மைக்ரோ சிப் பொறுத்துதல் உள்ளிட்டவை கடந்தாண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த ஒருங்கிணைந்த மேலாண்மைக்காக மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை தொடங்கப்பட்டு, தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த இணையதளத்தில் இதுவரை 1,26,781 செல்லப் பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில், இதுவரை 64,586 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 74,740 செல்லப் பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்டு, 78,328 செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இலவச சிகிச்சை: சென்னை மாநகராட்சியின் கீழ், செல்பட்டு வரும் செல்லப் பிராணிகள் மருத்துவமனைகளில் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, திரு.வி.க. நகா், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள செல்லப் பிராணிகள் மருத்துவமனைகளில் வழங்கும் இலவச சேவையை செல்லப் பிராணிகளின் உரிமையாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.