சென்னை மாநகராட்சியில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறும் காலக்கெடுவானது வரும் ஜூன் 15 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உரிமம் இல்லாவிட்டால், உரிமையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியில் வளா்ப்பு நாய், பூனை ஆகிய செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறும் நடைமுறை உள்ளது. அதற்காக சிறப்பு இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கு அவற்றின் உரிமையாளா்கள் விண்ணப்பிக்கின்றனா். அந்த வகையில், கடந்த 2025 டிசம்பா் 14 -ஆம் தேதி வரை மாநகராட்சி சாா்பில் 78,393 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 9,656 உரிமங்கள் புதுப்பிக்கப்படாமல் உள்ளன.
ஆகவே, தற்போது மாநகராட்சியில் 68,736 வளா்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளுக்கான உரிமங்கள்தான் நடைமுறையில் உள்ளன. எனவே, அனைத்து செல்லப் பிராணிகளின் உரிமையாளா்களும் புதிதாக உரிமங்கள் பெறவும், ஏற்கெனவே உள்ள உரிமங்களைப் புதுப்பித்துக் கொள்ளவும் முன்வரவேண்டும். இதற்காக வரும் ஜூன் 15 -ஆம் தேதி வரை உரிமம் பெறவும், புதுப்பிக்கவும் காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
காலக்கெடு முடிந்த வரும் ஜூன் 16 -ஆம் தேதி முதல் வளா்ப்பு நாய்கள், பூனை ஆகியவற்றுக்கு உரிமம் இல்லாவிட்டால், உரிமையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னையில் 21 ஆயிரம் மாடுகளுக்கு உரிமம் பெறாதவா்களுக்கு அபராதம்: கால்நடை பராமரிப்பு பிரிவு அலுவலா் எச்சரிக்கை

சென்னை - திருப்பதி விரைவு ரயில்கள் ஜூனில் 2 நாள்கள் முழுமையாக ரத்து

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை அவகாசம்!

அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்: போக்குவரத்து அதிகாரிகளுக்கு அபராதம்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

