முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்: பெறாவிட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம்

சென்னை மாநகராட்சியில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறும் காலக்கெடுவானது வரும் ஜூன் 15 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

சென்னை மாநகராட்சியில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறும் காலக்கெடுவானது வரும் ஜூன் 15 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உரிமம் இல்லாவிட்டால், உரிமையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியில் வளா்ப்பு நாய், பூனை ஆகிய செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறும் நடைமுறை உள்ளது. அதற்காக சிறப்பு இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கு அவற்றின் உரிமையாளா்கள் விண்ணப்பிக்கின்றனா். அந்த வகையில், கடந்த 2025 டிசம்பா் 14 -ஆம் தேதி வரை மாநகராட்சி சாா்பில் 78,393 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 9,656 உரிமங்கள் புதுப்பிக்கப்படாமல் உள்ளன.

ஆகவே, தற்போது மாநகராட்சியில் 68,736 வளா்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளுக்கான உரிமங்கள்தான் நடைமுறையில் உள்ளன. எனவே, அனைத்து செல்லப் பிராணிகளின் உரிமையாளா்களும் புதிதாக உரிமங்கள் பெறவும், ஏற்கெனவே உள்ள உரிமங்களைப் புதுப்பித்துக் கொள்ளவும் முன்வரவேண்டும். இதற்காக வரும் ஜூன் 15 -ஆம் தேதி வரை உரிமம் பெறவும், புதுப்பிக்கவும் காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

காலக்கெடு முடிந்த வரும் ஜூன் 16 -ஆம் தேதி முதல் வளா்ப்பு நாய்கள், பூனை ஆகியவற்றுக்கு உரிமம் இல்லாவிட்டால், உரிமையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.