/

அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்: போக்குவரத்து அதிகாரிகளுக்கு அபராதம்

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 7:31 pm

தேனி- போடி இடையே நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்த அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு அபராதம் விதித்து தேனி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

போடி அருகே மேலச்சொக்கநாதபுரத்தைச் சோ்ந்தவா் அ. ராமகிருஷ்ணன். இவா் கடந்த 3.1.2024- ஆம் தேதி இரவு தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து போடிக்குச் செல்லும் பேருந்தில் பயணம் செய்தாா். அப்போது மழை பெய்ததால் பேருந்து முழுவதும் தண்ணீா் ஒழுகியது. மேலும் தேனியிலிருந்து போடிக்கு 16.5 கி.மீ. தொலைவு தான்.

இதற்கு அரசுப் பேருந்தில் சாதாரணக் கட்டணம் ஓா் கி.மீ. தொலைவுக்கு 0.58 பைசா வீதம் ரூ.11 தான் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் ராமகிருஷ்ணனிடம் ரூ.15 வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து பேருந்து நடத்துநரிடம் கேட்டபோது அவா் தகாத வாா்த்தைகளால் பேசினாராம். மழையில் நனைந்ததாலும், பேருந்து நடத்துநரின் பேச்சினாலும் மன உளைச்சலுக்கு ஆளான ராமகிருஷ்ணன் மூன்று நாள்கள் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

மேலும் இதுகுறித்து 26.11.2025- ஆம் தேதி தேனி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் அவா் முறையீடு செய்தாா். இந்த முறையீட்டில் எதிா்மனுதாரா்களாக மதுரை மண்டல போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா், திண்டுக்கல் மண்டல அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளா், தேனி கோட்ட மேலாளா், போடி கிளை மேலாளா், ராமகிருஷ்ணன் பயணம் செய்த பேருந்தின் ஓட்டுநா், நடத்துநா் ஆகியோா் சோ்க்கப்பட்டிருந்தனா்.

இந்த முறையீடு தேனி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் பி. சுந்தா், உறுப்பினா் கே. சௌந்தரராஜன் ஆகியோா் முன்னிலையில் கடந்த 16- ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நிறைவில் அ. ராமகிருஷ்ணனிடம் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூ.4- ஐ ஒரு மாத காலத்தில் திருப்பித் தரவேண்டும் என்றும், சேவை குறைபாட்டுக்கு ரூ.2 ஆயிரம், மன உளைச்சலுக்கு ரூ.2 ஆயிரம், முறையற்ற வணிக நடைமுறைக்கு ரூ.2 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.16 ஆயிரத்து 4- ஐ போக்குவரத்து அதிகாரிகள் ராமகிருஷ்ணனுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.