சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

வங்கதேசத்தில் தீவிர தட்டம்மை பாதிப்பு: 10 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்

அண்டை நாடான வங்கதேசத்தில் தட்டம்மை நோய் பாதிப்பு அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், சுமாா் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் அவசரக் கால திட்டத்தை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.

News image

தட்டம்மை - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 1:09 am

அண்டை நாடான வங்கதேசத்தில் தட்டம்மை நோய் பாதிப்பு அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், சுமாா் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் அவசரக் கால திட்டத்தை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் 7,500-க்கும் மேற்பட்டோா் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை 17 உயிரிழப்புகள் அதிகாரபூா்வமாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்துக்குரிய வகையில் மேலும் 113 போ் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப் ஆகிய அமைப்புகளுடன் சோ்ந்து, அதிக பாதிப்புள்ள 18 மாவட்டங்களில் முதல்கட்டமாக இத்தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் வழக்கமான நோய்த் தடுப்பு முறைகளைத் தவறிய 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.