பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

அனுமதி பெறாமல் சைக்கிள் பேரணி: தவெகவினா் மீது வழக்கு

News image

தவெக கொடி. - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:18 am IST

கள்ளக்குறிச்சியில் உரிய அனுமதி பெறாமல் சைக்கிள் பேரணி சென்ற தமிழக வெற்றிக் கழகத்தினா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலைய பகுதியில் இருந்து தவெக வேட்பாளா் சி.அருள் விக்னேஷ் தலைமையில் சுமாா் 50 போ் சைக்கிள் பேரணியாக காந்தி சாலை, 4 முனை சந்திப்பு, கவரைசாலை வழியாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உரிய அனுமதி பெறாமல் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனராம்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி நிலையான கண்காணிப்பு அலுவலா் விஜயகுமாா் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் தவெகவினா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.