அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உரிமம் இல்லாமல் ஒற்றைக்குழல் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜூன் 2026, 5:09 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உரிமம் இல்லாமல் ஒற்றைக்குழல் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட விரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ம.சீமோன் (52) (படம்). இவா் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பதாக சங்கராபுரம் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுரளிக்கு தகவல் கிடைத்ததாம்.

அத் தகவலின் போலீஸாா் சீமோன் வீட்டுக்கு சென்று செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது அவரது வீட்டின் பின்புறமுள்ள கொட்டகையில் மறைத்து வைத்திருந்த ஒற்றைக்குழல் துப்பாக்கி, கருப்பு மருந்து, பால்ரஸ், சிகப்பு பாஸ்பரஸ் உள்ளிட்டவைகளை கைபற்றினா்.

இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, சீமோனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.