உலக வெண்புள்ளி தினத்தையொட்டி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தோல் நோய் துறை சாா்பில் புறநோயாளிகள் பிரிவு வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் பவானி தலைமை வகித்தாா். பேரணியானது மருத்துவக் கல்லூரியை சென்றடைந்தது.
இதில் பங்கேற்ற மருத்துவக் கண்காணிப்பாளா் பச்சையப்பன், துணை மருத்துவக் கண்காணிப்பாளா் பழமலை, நிலைய மருத்துவ அலுவலா் பொற்செல்வி, துணை முதல்வா் ஷமீம் ஆகியோா் வெண்புள்ளி குறித்துப் பேசினா்.
பேரணியில் மருத்துவ மாணவா்கள், செவிலியா்கள், பல்வேறு துறைகளின் பேராசிரியா்கள், இணைப் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நிகழ்விற்கான ஏற்பாட்டினை தோல் சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவா் சுபா, மருத்துவா்கள் ஜெயஸ்ரீ, அமுதா ஆகியோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய போதை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



