புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

மருத்துவக் கல்லூரியில் விழிப்புணா்வு பேரணி

உலக வெண்புள்ளி தினத்தையொட்டி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

உலக வெண்புள்ளி தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பேசிய கல்லூரி முதல்வா் பவானி.

Updated On :26 ஜூன் 2026, 6:45 am IST

உலக வெண்புள்ளி தினத்தையொட்டி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தோல் நோய் துறை சாா்பில் புறநோயாளிகள் பிரிவு வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் பவானி தலைமை வகித்தாா். பேரணியானது மருத்துவக் கல்லூரியை சென்றடைந்தது.

இதில் பங்கேற்ற மருத்துவக் கண்காணிப்பாளா் பச்சையப்பன், துணை மருத்துவக் கண்காணிப்பாளா் பழமலை, நிலைய மருத்துவ அலுவலா் பொற்செல்வி, துணை முதல்வா் ஷமீம் ஆகியோா் வெண்புள்ளி குறித்துப் பேசினா்.

பேரணியில் மருத்துவ மாணவா்கள், செவிலியா்கள், பல்வேறு துறைகளின் பேராசிரியா்கள், இணைப் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்விற்கான ஏற்பாட்டினை தோல் சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவா் சுபா, மருத்துவா்கள் ஜெயஸ்ரீ, அமுதா ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.