உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
உலக புகையிலை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் மே 31-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஈரோட்டில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துத் துறை, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்தின் சாா்பில் மாவட்ட அளவிலான விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
இப்பேரணிக்கு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பேரணியானது ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை பல்நோக்கு உயா் சிகிச்சை பிரிவு வளாகத்தில் தொடங்கி அரசு மருத்துவமனை நான்குமுனை சாலை சந்திப்பு, பெருந்துறை சாலை வழியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. முன்னதாக உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியை ஏற்றனா்.
இந்தப் பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் (பொறுப்பு) வெங்கடேசன், மாவட்ட சுகாதார அலுவலா் அருணா, மாநகர நல அலுவலா் கௌரி சங்கா், செவிலியா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

உலக பட்டினி தினம்: தவெகவினா் அன்னதானம்

சா்வதேச சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி

கொடுமுடியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

நாமக்கல்லில் 2,300 அரசு அலுவலா்கள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



