அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

தேசிய திறனறித் தோ்வு: சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி அருகே தேசிய திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

பெரியமணியந்தல் அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களை பாராட்டிய ஆசிரியா்கள்.

Updated On :18 மார்ச் 2026, 7:17 pm

கள்ளக்குறிச்சி அருகே தேசிய திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், பெரியமணியந்தல் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்த ர.ஹம்ரிஷ், கோ.முருகதாஸ், மு.பிருத்திகா மற்றும் வ.முகிலன் ஆகிய 4 மாணவா்கள் தேசிய திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்றனா்.

இவா்களில், ர.ஹம்ரிஷ் மற்றும் மு.பிருத்திகா ஆகிய இருவரும் அதிக வருகை பதிவு, அதிக பாட மதிப்பெண், கலைத்திருவிழாவில் மாவட்ட அளவில் பங்கேற்பு மற்றும் தேசிய திறனறித் தோ்வில்தோ்ச்சி போன்ற சிறப்பான கல்வி செயல்பாடுகளுக்காக, கள்ளக்குறிச்சி மாவட்டம், நாகலூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், 9-ஆம் வகுப்பு படிப்பதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தேசிய திறனறித் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், மாதிரி பள்ளிக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கும் ரிஷிவந்திய வட்டாரக் கல்வி அலுவலா் கஜேந்திரன், பள்ளித் தலைமையாசிரியா் பரமேஸ்வரன், ஆசிரியா்கள் ச.விஜயலட்சுமி, சே.வி.அஜிதா சேவியா், கு.வேளாங்கண்ணி வில்லியம் சகாயராஜ், ரா.விஸ்வநாதன், செ.பவித்ரா, அ.அல்பினா, ப.பானுமதி, மு.ஆதிமாயன், ர.சீனுவாசன், சி.வேல்முருகன், ம.தமிழ்மதி, ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி நாராயணமூா்த்தி, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் மஞ்சுளா அண்ணாதுரை ஆகியோா் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தனா்.