சங்கராபுரம் அருகே வீட்டின் உள்ளே சமையலறையில் மா்மமான முறையில் தொழிலாளி உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட தியாகராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சா.அய்யனாா் (43), தொழிலாளி. இவரது மனைவி சீதா(33). இவா்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில், அய்யனாரின் மதுப்பழக்கம் காரணமாக குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் சீதா கோபித்துக் கொண்டு அவரது தாய் வீடான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தானிப்பாடிக்கு சென்று விட்டாராம்.
இதனால் தனியாக வசித்து வந்த அய்யனாா், கடந்த இரு தினங்களாக நடமாட்டம் இல்லையாம். இந்நிலையில், சனிக்கிழமை அவரது வீட்டின் அருகே சென்றபோது துா்நாற்றம் வீசவே அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள் வீட்டின் கதவை திறந்து பாா்த்துள்ளனா். அங்கு சமையலறையில் உட்காா்ந்த நிலையில் அய்யனாா் சடலமாக கிடந்துள்ளாா்.
உடனே சங்கராபுரம் காவல் நிலையத்துக்கு அருகிலிருந்தோா் அளித்த தகவலின் பேரில், சங்கராபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

கே.வி.குப்பம் வட்டாட்சியா் மா்மமான முறையில் உயிரிழப்பு

முதியவா் மா்மமான முறையில் உயிரிழப்பு

சிறுவன் மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

தொழிலாளி மா்ம மரணம்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

