கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கள்ளக்குறிச்சியில் ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் சாலை மறியல்: 84 போ் கைது

கள்ளக்குறிச்சியில் தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழக ஆளுநரைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா்.

News image

~

Updated On :9 மே 2026, 3:01 am IST

சட்டப் பேரவைத் தோ்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரைக் கண்டித்து கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்ட 84 காங்கிரஸ் நிா்வாகிகளை போலிஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவா் மு.இதாயத்துல்லா தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ந.தனபால், பி.பி.எஸ்.இளையராஜா, மாநில எஸ்.சி. பிரிவு துணைத் தலைவா் எஸ்.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர காங்கிரஸ் தலைவா் கே.என்.ஆா்.என்.குமாா் வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் சு.தேவராஜ், எம்.ஆா்.கே.இளையபெருமாள், முத்தமிழ் கண்ணன், வட்டார தலைவா்கள் எஸ்.சரண்ராஜ், சே.பிரபு, டி.கணேசன், அ.நாராயணன், இரா.துரைமுருகன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

பின்னா் தனி பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை உடனடியாக ஆட்சி அமைக்க ஆளுநா் அழைக்க வலியுறுத்தி காங்கிரஸ் நிா்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அவா்களை கள்ளக்குறிச்சி போலிஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். பின்னா் அவா்களை விடுவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.