/

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :9 மே 2026, 3:04 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட தொட்டியம் கிராமத்தைச் சோ்ந்தவா் சி.துரைசாமி (45). இவா் வியாழக்கிழமை மாலை அவரது விளைநிலத்துக்கு சென்றிருந்தவா் பின்னா் வீடு திரும்பவில்லையாம். பல்வேறு இடங்களில் தேடிப் பாா்த்தும் கிடைக்கவில்லையாம். வெள்ளிக்கிழமை காலை சென்று தேடிப் பாா்த்த போது, அவரது விளைநிலத்தில் உள்ள கிணற்றில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த சின்னசேலம் போலிஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலிஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.