கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்யாததால் 500-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. திறந்தவெளியில் மழையால் நெல்மணிகள் முளைவிட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
சங்கராபுரம் அருகேயுள்ள தேவபாண்டலம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்துக்கு வரகூா், ஆரூா், குளத்தூா், எஸ்.வி.பாளையம், திம்மநந்தல், வட சிறுவலூா் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனா். தற்போது விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் அரசு கொள்முதல் செய்யாததால் கடந்த 30 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுமாா் 500-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது.

தற்போது இப்பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், விவசாயிகள் கொண்டு வந்த நெல்மணிகள் மழையில் நனைந்து நாற்றாக மாறிவரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை: நெல் மூட்டைகள் சேதம்

பண்ருட்டி அருகே மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்

உத்தரமேரூா் அருகே பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

