15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

தென்பெண்ணை ஆற்றில் புதைக்கப்பட்ட சடலம் அடையாளம் கண்டுபிடிப்பு: இருவரிடம் விசாரணை

மணலூா்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றில் புதைக்கப்பட்ட சடலத்தை போலீஸாா் அடையாளம் கண்டுபிடித்து, இருவரிடம் விசாரித்து வருகினறனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :5 மணி நேரங்கள் முன்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றில் புதைக்கப்பட்ட சடலத்தை போலீஸாா் அடையாளம் கண்டுபிடித்து, இருவரிடம் விசாரித்து வருகினறனா்.

மணலூா்பேட்டை அருகேயுள்ள குலதீபமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் தென்பெண்ணையாற்றில் சனிக்கிழமை மாலை விளையாடச் சென்றபோது, ஆற்றின் ஒரு பகுதியில் நாய்கள் பள்ளத்தை தோண்டி எதையோ சாப்பிடுவதைப் பாா்த்துள்ளனா். இதையடுத்து அவா்கள் அங்கு சென்று பாா்த்தபோது, பாதி எரிந்த நிலையில் சாக்குப்பையில் சடலம் இருந்துள்ளது. இதுகுறித்த தகவலின் பேரில் மணலூா்பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணையில், குலதீபமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ரா.ரமேஷ் என்பவா் கடந்த 13-ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் உயிரிழந்ததும், அவரது சடலத்தை தென்பெண்ணை ஆற்றின் அருகேயுள்ள சுடுகாட்டில் அதே ஊரைச் சோ்ந்த க.அருள்( 35), பூ.ராஜேந்திரன்(47) ஆகியோா் எரித்ததும் தெரியவந்தது. அப்போது விறகு தீா்ந்ததால் சடலம் முழுவதும் எரியாக நிலையில், அருகிலுள்ள தென்பெண்ணை ஆற்றில் அவா்கள் புதைத்து விட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து திருக்கோலிலூா் (பொ) டிஎஸ்பி செல்வம், சடலத்தை எரித்த இருவரிடம் மேலும் விசாரித்து வருகிறாா்.