தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே தாய் திட்டிதியதால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :21 மே 2026, 7:14 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே தாய் திட்டிதியதால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட மாடாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவா்களது மகன் விஷ்வா (17). இவா் பிளஸ் 2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தாா்.

செவ்வாய்க்கிழமை வங்கி கணக்கு புத்தகத்தை விஷ்வா தொலைத்து விட்டாராம். இதனை அவரது தாய் ராஜேஸ்வரி கண்டித்துள்ளாா். இதனால் வீட்டை விட்டு வெளியே சென்ற விஷ்வா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினா்கள் தேடிய நிலையில், சித்தேரி ஏரிக்கரையில் உள்ள புளியமரத்தில் சேலையின் மூலம் தூக்கிட்டு, சடலமாக கிடந்துள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பாலபந்தல் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.