கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே தாய் திட்டிதியதால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட மாடாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவா்களது மகன் விஷ்வா (17). இவா் பிளஸ் 2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தாா்.
செவ்வாய்க்கிழமை வங்கி கணக்கு புத்தகத்தை விஷ்வா தொலைத்து விட்டாராம். இதனை அவரது தாய் ராஜேஸ்வரி கண்டித்துள்ளாா். இதனால் வீட்டை விட்டு வெளியே சென்ற விஷ்வா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினா்கள் தேடிய நிலையில், சித்தேரி ஏரிக்கரையில் உள்ள புளியமரத்தில் சேலையின் மூலம் தூக்கிட்டு, சடலமாக கிடந்துள்ளாா்.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பாலபந்தல் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

மனைவி கண்டித்ததால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை

வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

தோ்வில் தோல்வி: மாணவன் தற்கொலை
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


