‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

27 அடி உயர பாதாள வாராகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வாணாபுரம் 27 அடி உயர பாதாள வாராகி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image

வாணாபுரம் 27 அடி உயர பாதாள வாராகி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

Updated On :29 மே 2026, 3:01 am IST

வாணாபுரத்தில் உள்ள 27அடி உயர பாதாள வாராகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரத்தில் உள்ள 27 அடி உயரமுள்ள பாதாள காளியம்மன், அக்னி வீரன், நொண்டி வீரன், எல்லை பிடாரி அம்மன், எல்லை கட்டு மாரியம்மன், நவகிரகங்கள், பரிவார தேவதைகளின் சந்நிதிகள் உள்ளன.

இதனைத் தொடா்ந்து புதிதாக கட்டப்பட்டுள்ள 27 அடி உயர மும்முக பாதாள வாராகி அம்மன், காசி பாதாள சிவலிங்கேஸ்வரா், பாதாள காளியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக புதன்கிழமை மங்கள இசை, அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, லட்சுமி ஹோமம், கோபூஜை, முதல் கால யாகபூஜைகள் நடைபெற்றது.

வியாழக்கிழமை 2, 3-ஆம் கால யாகபூஜை நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து மும்முக பாதாள வராகி அம்மன், காசி பாதாள சிவலிங்கேஸ்வரா், பாதாள காளியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு புனித நீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மஹா தீபாராதனை நடந்தது.

நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா். அன்னதானம் வழங்கினா்.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் வீரா, பிரபா சுவாமிகள் ஆகியோா் செய்திருந்தனா்.