ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

தமிழை மொழிப்பாடமாகத் தேர்வு செய்த மாணவர்களை அங்கீகரிக்கக் கோரிக்கை

: புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில், தமிழை மொழிப்பாடமாக எடுத்து முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை அங்கீகரிக்க வேண்டுமென்று புதுச்சேரி இலக்கியப்

Updated On :13 மே 2013, 12:37 am IST

: புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில், தமிழை மொழிப்பாடமாக எடுத்து முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை அங்கீகரிக்க வேண்டுமென்று புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் வலியுறுத்தியுள்ளது.

 இது தொடர்பாக அதன் நிறுவனர் பெ.பராங்குசம் வெளிட்ட அறிக்கை:

 தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் தமிழை மொழிப்பாடமாக எடுத்துப் படித்து, மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள் பட்டியலையே அந்த அரசு வெளியிடுகிறது. இவர்களைவிட, பிறமொழிப்பாடம் மூலம் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும், மாநில அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.

 ஆனால் புதுச்சேரி அரசு, தமிழ் அல்லாத பிறமொழிப் பாடம் எடுத்துப் படித்தவர்களையே, முதல் 3 இடங்களில் அறிவிக்கிறது. தமிழைத் தேர்ந்தெடுத்துப் படித்த மாணவர்களைப் புறந்தள்ளியிருக்கிறது.

 புதுச்சேரி தவிர்த்து, பிற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழியே பிரதானமாக, கட்டாயமாகக் கற்பிக்கப்படுகிறது. இனி வரும் ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் தமிழை மொழிப்பாடமாகத் தேர்வு செய்தோரையே அங்கீகரிக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.