காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, ஐ.நா. சபைக்கு விரைவு அஞ்சல் அனுப்பும் போராட்டத்தை விழித்தெழுந்த தமிழர் மாணவ இளைஞர் பேரவை மற்றும் திருநங்கையர் செவ்வாய்க்கிழமை நடத்தினர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் பலவகையான போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், புதுச்சேரியில் விழித்தெழுந்த தமிழர் மாணவ இளைஞர் பேரவையின் தலைவர் ரமேஷ் தலைமையில் இளைஞர்கள், திருநங்கைகள், மாணவர்கள் என 75 பேர் புதுச்சேரி தலைமை அஞ்சல் நிலையம் வந்தனர். அவர்கள் அங்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் ஐ.நா.சபைக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, விரைவு அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக மத்திய அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அறப்போராட்டம் நடத்துவோம் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

NTK சீமானை சந்தித்த முதல்வர் விஜய் | Vijay | Dinamani

பாமக தலைவர் அன்புமணியை சந்தித்த முதல்வர் விஜய் | Vijay | TVK | Anbumani | Dinamani

முதல்வர் பதவியேற்பு விழாவில் மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்து: வைகோ கண்டனம்!

மானுடத்தின் முன்னோடி மீனவன்
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
