புதுச்சேரியில் தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தந்தை பெரியாரின் 45-ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி பிள்ளைத்தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மாநில அரசு சார்பில் முதல்வர் வே. நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திராவிடர் கழகத்தினர் சிவ. வீரமணி தலைமையில் மண்டலத் தலைவர் ராசு, செயலாளர் அறிவழகன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ரஞ்சித்குமார் உள்ளிட்ட பலர் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
திமுக சார்பில் புதுவை தெற்கு மாநில திமுக அவைத் தலைவர் சீத்தா.வேதநாயகம் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ அனிபால் கென்னடி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வடக்கு மாநில திமுக சார்பில் பொருளாளர் செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
அதிமுக சார்பில் புதுவை மாநிலச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில், கோகுலகிருஷ்ணன் எம்.பி., எம்எல்ஏக்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கரன் உள்ளிட்ட பலர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதே போல, அதிமுக ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் முன்னாள் எம்.பி. ராமதாஸ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதிமுக சார்பில் மாநிலச் செயலாளர் கபிரியேல் தலைமையில் மாலை அணிவித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாநிலச் செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்தனர்.
மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல, புதிய நீதிக்கட்சி மாநிலத் தலைவர் எஸ். பொன்னுரங்கம் தலைமையிலான நிர்வாகிகளும், பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவர் கோ. பாரதி உள்ளிட்டோரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (25.06.2026) - கன்னி
இன்றைய ராசி பலன் (25.06.2026) - சிம்மம்
இன்றைய ராசி பலன் (25.06.2026) - கடகம்

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.65! 11 காசுகள் உயர்வு!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


