பாண்டிச்சேரி மூத்த குடிமக்கள் நலவாழ்வுச் சங்கத்தின் 20-ஆவது ஆண்டு விழா புதுச்சேரி லாஸ்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்த சட்டப்பேரவைத் தலைவர்
வெ. வைத்திலிங்கம், சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பை நல்கிய மூத்த குடிமக்களுக்கு பரிசுகள் கெளரவித்தார். விவேகானந்தா மேல்நிலைப் பள்ளித் தாளாளரும், எம்எல்ஏவுமான எஸ். செல்வகணபதி, மூத்த குடிமக்களின் பேரக் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். பாண்கேர் செயலாளர் பி. பத்மநாபன், பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மூத்த குடிமக்களின் பேரக் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
இதில் பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் குறித்து முன்னாள் நீதிபதி டி. ராமபத்திரன் பேசினர். முதியோர்கள் பிரச்னை தலைமுறை இடைவெளியா அல்லது தகவல் இடைவெளியா என்ற தலைப்பில் மருத்துவர் டி.எல். வாசுதேவன் பேசினார்.
இதில் டிஐஜி வி.ஜெ.சந்திரன், புதுவை தமிழ்ச்சங் க தலைவர் வி. முத்து, புதுவை சமூகநலத்துறை இயக்குநர் கே. சாரங்கபாணி, கவிதை வானில் கவி மன்றத்தின் தலைவர் கலாவிசு, மூத்த குடிமக்கள் நலவாழ்வுச் சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகாநதி தொடர் கடைசிநாள் படப்பிடிப்பில் கண்கலங்கி அழுத நடிகர்கள்!

நீர் அருந்துவதால் இவ்வளவு பலன்களா?

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முதல் பாடல் அப்டேட்!

போதைக் கொடுமையால் நிகழும் கொடூர குற்றங்களை அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


