மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது

புதுச்சேரியில் 16 வயது சிறுமியை மிரட்டி பாலியன் வன்கொடுமை செய்ததாக 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :23 ஜூலை 2018, 9:44 am IST

புதுச்சேரியில் 16 வயது சிறுமியை மிரட்டி பாலியன் வன்கொடுமை செய்ததாக 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி, விழுப்புரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு அடிக்கடி பேருந்தில் சென்று வந்தபோது, வழுதாவூர் பகுதியைச் சேர்ந்த விக்கி என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்தச் சிறுமியை விக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை தனது செல்லிடப்பேசியில் பதிவு செய்ததுடன், அதை காண்பித்து சிறுமியை மிரட்டி ஒரு வீட்டில் அடைத்து வைத்து, தனது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து மீண்டும் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸார் விக்கி உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர். இந்த நிலையில் விக்கி (20), முகிலன் (19), சூர்யா (20) மற்றும் 17 வயது சிறுவர்கள் இரண்டு பேர் என 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரணை நடத்தி அவர்களைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.