காரைக்கால் பகுதியில் உள்ள கழிப்பறைகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் வளர்ச்சிக் குழுத் தலைவர் பி. ராஜலட்சுமணன், செயலர் டி. வின்சென்ட்ராஜ், துணைச் செயலர் பி. ராஜேந்திரன், உறுப்பினர் பெரியார் கணபதி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவனை சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். அவரிடம் அளித்த கோரிக்கை மனு விவரம் :
காரைக்காலில் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதுமான கழிப்பறைகளின்றியும், முறையான பராமரிப்பின்றியும் காணப்படுகிறது. இது மாணவ, மாணவியருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்லூரிகளில் படிப்பு முடித்தோர் வேலைவாய்ப்பு பெறும் வகையில், திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்களை காரைக்காலில் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். காரைக்கால் நகரப் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலைகளை, புதுப்பிக்கும் வகையில் போர்க்கால முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
காரைக்கால் - பேரளம் அகல ரயில் பாதை அமைப்புப் பணியை மத்திய அரசு தொடங்குவதற்கான பணிகளை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







