வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பாண்டெக்ஸ் ஊழியர்கள் நூதன போராட்டம்

ஈரத்துணியை வயிற்றில் கட்டிக்கொண்டு பாண்ட்டெக்ஸ் ஊழியர்கள் புதுச்சேரியில் திங்கள்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :5 ஜூன் 2018, 5:20 am

DIN

ஈரத்துணியை வயிற்றில் கட்டிக்கொண்டு பாண்ட்டெக்ஸ் ஊழியர்கள் புதுச்சேரியில் திங்கள்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பாண்டெக்ஸ் சாயப் பிரிவில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு கடந்த 17 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஊதியம் வழங்கக் கோரி அவர்கள் பலகட்ட போராட்டங்களில ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஏஐடியுசி பாண்டெக்ஸ் சாயப் பிரிவில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் திங்கள்கிழமை தட்டாஞ்சாவடி பாண்டெக்ஸ் அலுவலகம் அருகே வயிற்றில் ஈரத்துணி அணிந்து போராட்டம் நடத்தினர் (படம்.
போராட்டத்துக்கு, பாண்டெக்ஸ் கூட்டுறவு பிரிவு சங்கத் தலைவர் முருகன், செயலாளர் நெடுஞ்செழியன், பொருளாளர் குட்டன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநிலச் செயலாளர் சேதுசெல்வம், கைத்தறிச் சங்கத் தலைவர் செல்வராசு, பாசிக் ஊழியர்கள் 
சங்கச் செயலாளர் முத்துராமன் உள்பட பலர் கலந்துகொண்டு 
ஊதியம் வழங்கக் கோரி கோஷம் எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.