புதுவை மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் கட்சி குறித்து 10 நாள்களில் முடிவு செய்யப்படும் என்று மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
இது குறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, மீனவர்களுக்கான வாழ்வாதாரத்தை பாதுகாக்க தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் வகையில் மீனவ சங்கப் பிரதிநிதிகளிடம் கருத்துகேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுவையில் 30 தொகுதிகளிலும் 2 நாள்கள் கருத்துகேட்க முடிவு செய்துள்ளோம்.
புதுவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட கட்சித் தலைமையிடம் வலியுறுத்துவோம். இத்தொகுதியில் பாஜக போட்டியிடுமா அல்லது கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படுமா என்பது குறித்து முடிவு எடுப்பது தேசியத் தலைமையின் உரிமை. புதுவை மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடும் என்பது குறித்து இன்னும் 10 நாள்களில் முடிவு செய்யப்படும் என்றார் சாமிநாதன்.
பேட்டியின்போது பாஜக துணைத் தலைவர் ஆர்.செல்வம், பொதுச்செயலர் தங்க.விக்ரமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை வெய்யில்: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்!

பணவீக்க நாயகனின் அதிரடி தொடருகிறது.. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

கார்த்தி - 30 பூஜை!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


