தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காவலருக்கு கரோனா: புதுச்சேரி காவல் நிலையம் மூடல்

காவலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து புதுச்சேரி காவல் நிலையம் மூடப்பட்டது.

News image
Updated On :30 ஜூன் 2020, 6:21 am

DIN

காவலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து புதுச்சேரி காவல் நிலையம் மூடப்பட்டது.

புதுச்சேரியில் தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் 31 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரி நேரு வீதியில் அமைந்துள்ள பெரியகடை காவல் நிலையத்தைச் சேர்ந்த 32 வயது காவலர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து காவல் நிலையத்துக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு,  மூடப்பட்டது. மேலும், காவல் நிலையத்துக்குள் அமைந்துள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகமும் மூடப்பட்டது. 

தொடர்ந்து, காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 50 காவலர்களை தனிமைப்படுத்தி, கரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பெரியகடை காவல் நிலையத்தின் பொருட்கள் அனைத்தும் எதிரே உள்ள இடத்தில் வைக்கப்பட்டு காவல் நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.