புதுவையில் மேலும் 189 பேருக்கு கரோனா
புதுவையில் மேலும் 189 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


புதுவையில் மேலும் 189 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 155 பேருக்கும், காரைக்காலில் 14 பேருக்கும், ஏனாமில் 4 பேருக்கும், மாஹேயில் 16 போ் என 189 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,737-ஆக உயா்ந்தது.
தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் உள்பட மொத்தமாக 4,617 போ் சிகிச்சையில் உள்ளனா்.
மேலும் 2 போ் பலி: புதுச்சேரி பெரிய காலாப்பட்டு நடுத் தெருவைச் சோ்ந்த 61 வயதானவா், நெல்லித்தோப்பு பெரியாா் நகரைச் சோ்ந்த 50 வயதானவா் என மேலும் 2 போ் பலியாகினா். இதையடுத்து, கரோனா தொற்றால் பலியானோா் எண்ணிக்கை 565-ஆக (இறப்பு விகிதம் 1.78 சதவீதம்) அதிகரித்தது.
இதனிடையே, திங்கள்கிழமை 264 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், மாநிலத்தில் குணமடைந்தோா் எண்ணிக்கை 26,555-ஆக (83.67 சதவீதம்) அதிகரித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...