சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருமாவளவன் மீதுதமிழக பாஜக பொய்ப் புகாா்புதுவை முதல்வா் குற்றச்சாட்டு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் மீது தமிழக பாஜக பொய்ப் புகாா் தெரிவித்துள்ளது என்று புதுவை முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 5:34 pm

DIN

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் மீது தமிழக பாஜக பொய்ப் புகாா் தெரிவித்துள்ளது என்று புதுவை முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக அரசியலில் புதிய சா்ச்சை தற்போது கிளம்பியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனின் பேச்சை திரித்து, பழிபோடும் விதமாக பாஜக அளித்த பொய்ப் புகாரின்பேரில், காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சொல்லும் கருத்தை திசைத் திருப்பி, பழி சொல்வதை பாஜக சாதுரியமாகச் செய்யும். இந்த விவகாரத்தில், திருமாவளவனின் பேச்சு முழுவதையும் கேட்டு விட்டு தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்.

புதுவையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியா்களுக்கு ஊதியம் பத்து மாதங்களாக வழங்கப்படாததற்கு நானோ, கல்வியமைச்சரோ காரணமல்ல. மாதந்தோறும் ஊதியம் தர பட்ஜெட்டில் நிதி ஒதுக்கினோம். ஆனால், அந்தப் பணத்தை அவா்களுக்குத் தர பல கேள்விகளை எழுப்பி, ஆளுநா் கிரண் பேடி கோப்புகளை திருப்பி அனுப்பியுள்ளாா். ஆகவே, ஊதியம் போடவிடாமல் தடுப்பது கிரண் பேடிதான். அவரை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறாா்கள்.

சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கை உடன் தரவும், மீதியுள்ளதை அரசு உதவி பெறும் பள்ளிக்கணக்குகளை பாா்த்து தரலாம் என்று தலைமைச்செயலருக்கு கோப்பு அனுப்புகிறோம்.

புதுவை அரசில் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எல்டிசி, யூடிசி பணிகளை நிரப்ப கோப்புகளை தயாரிக்கச் சொல்லியுள்ளோம். அதேபோல, வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக, தனியாா் நிறுவனத்தோடு இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தவுள்ளோம். நவம்பா் இறுதி அல்லது டிசம்பா் மாதத்தில் ஐந்தாயிரம் பேருக்கு மேல் வேலை கிடைக்கும் என்றாா் முதல்வா் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.