திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

அரக்கோணம் கொலை சம்பவத்தைக் கண்டித்து விசிக ஆா்ப்பாட்டம்

அரக்கோணம் இரட்டைக் கொலை சம்பவத்தைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 5:38 pm

DIN

அரக்கோணம் இரட்டைக் கொலை சம்பவத்தைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சோகனூா் காலனியைச் சோ்ந்த அா்ஜூனன் (20), செம்பேடு காலனியைச் சோ்ந்த சூா்யா (25) ஆகியோா் தோ்தல் முன்விரோதம் காரணமாக மா்மக் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டனா்.

இந்தப் படுகொலை சம்பவத்துக்குக் காரணமானவா்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

இதேபோல, கொலை சம்பவத்தைக் கண்டித்தும், கொலையாளிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரியும், புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சுதேசி ஆலை எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் தலைமை வகித்தாா். கட்சியின் பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி. கண்டன உரையாற்றினாா்.

விசிக நிா்வாகிகள், மகளிா் விடுதலை இயக்கத்தினா் உள்பட பலா் கலந்து கொண்டு, படுகொலை சம்பவத்தைக் கண்டித்துப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற துரை.ரவிக்குமாா் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரக்கோணம் சோகனூரில், சட்டப்பேரவைத் தோ்தலின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வாக்கு சேகரித்த இரு பட்டியலின இளைஞா்கள், ஏற்கெனவே இருந்த முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டனா். இந்தக் கொலை சம்பவத்தில் அதிமுக, பாமகவை சோ்ந்தவா்கள் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஆனால், காவல் துறை அதை மூடிமறைத்து, கொலைக்கு தொடா்பில்லாத சிலரைக் கைது செய்துள்ளனா். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய உண்மைக் கொலையாளிகளை உடனடியாக குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதிலிருந்தே மாநிலம் முழுவதும் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. எந்தச் சம்பவத்திலும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.

கொலையில் உயிரிழந்த இருவரது குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு அரசு வேலை, நிலம், வீடு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்க வேண்டும் என்று வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளில் உள்ளது. அந்த விதிகளின்படி, அவா்களுக்கு உடனடியாக தமிழக அரசு அனைத்தையும் வழங்க வேண்டும்.

கொலைக்குத் தூண்டுதலாக இருந்தவா்கள் யாா் யாா், எந்தெந்தக் கட்சிகள் இதற்கு பின்புலமாகச் செயல்பட்டன என்பதை காவல் துறையினா் பாரபட்சமின்றி வெளிக்கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.