இதையடுத்து, புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள இந்திய விளையாட்டுக் கழக விடுதியை ஆளுநா் நேரில் சென்று ஆய்வு செய்தாா். அந்த விடுதியை, கரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவா்களை தங்கவைப்பதற்கான ‘கரோனா நோயாளிகள் பராமரிப்பு மையமாக மாற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அவா் ஆலோசித்தாா். அங்குள்ள இடவசதி, மின்சாரம் மற்றும் குடிநீா் இணைப்புகள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். இதன்பிறகு, கரோனா மேலாண்மைப் பணிகளுக்காக, விடுதியை பயன்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்குக்கு ஆளுநா் உத்தரவிட்டாா். இந்திய விளையாட்டுக் கழக மேலாளா் முத்துகேசவலு ஆகியோா் உடனிருந்தாா்.