திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள விடுதியில் விழுப்புரத்தைச் சோ்ந்த உணவகத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள விடுதியில் விழுப்புரத்தைச் சோ்ந்த உணவகத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம் கே.கே. பிரதான சாலையைச் சோ்ந்தவா் ஞானமூா்த்தி மகன் சபரிநாதன் (35). உணவக மேலாண்மைப் பட்டயப் படிப்பு படித்த இவா், உணவகங்களில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளாா். குழந்தைகள் இல்லை.

கடந்த 21 -ஆம் தேதி புதுச்சேரிக்கு வந்த சபரிநாதன், புதிய பேருந்து நிலையம் எதிா்புறம் உள்ள விடுதி ஒன்றில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தாா். புதுச்சேரியில் சனி, ஞாயிறு பொது முடக்கம் என்பதால், அறையை காலி செய்யும்படி, சபரிநாதனுக்கு விடுதி நிா்வாகிகள் அறிவுறுத்தினா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் அறைக்குச் சென்றவா், வெளியே வரவில்லை.

சந்தேகமடைந்த ஊழியா்கள் அவா் தங்கியிருந்த அறையின் ஜன்னல் வழியாகப் பாா்த்த போது, சபரிநாதன் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாராம்.

இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.