பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புதுவையில் நிலப்பட்டா ஆவணங்களை செல்பேசி, இணைய வழியில் பெறும் திட்டம் தொடக்கம்

புதுவை மாநிலத்தில் நிலவரி திட்ட நகல், பட்டா நகல் உள்ளிட்டவை எளிமையாக பொதுமக்கள் பார்வையிடும் வகையில், இணையதள முகவரியை துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோர் தொடக்கி வைத்தனர். 

News image
புதுவையில் நிலப்பட்டா ஆவணங்களை செல்பேசி, இணைய வழியில் பெறும் திட்டத்தை துவக்கிவைத்த துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர்.
Updated On :2 ஆகஸ்ட் 2021, 7:09 am

DIN

புதுவை மாநிலத்தில் நிலவரி திட்ட நகல், பட்டா நகல் உள்ளிட்டவை எளிமையாக பொதுமக்கள் பார்வையிடும் வகையில், இணையதள முகவரியை துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோர் தொடக்கி வைத்தனர். 

புதுச்சேரியில் நில அளவை மற்றும் பதிவேடுகள் இயக்ககம் சார்பில், பொது சேவை மையங்கள் மூலம் நிலவரித் திட்ட நகல், பட்டா நகல், புலப்பட நகல் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

இதனை மேலும் எளிமையாக்கி www.nilqmagal.py.gov.in என்கிற இணையதளம் மூலம், பொதுமக்கள் எந்நேரத்திலும் பார்வையிடும் வகையில், இணையவழி மூலமாகவோ, அலைபேசி மூலமாகவோ 50 ரூபாய் கட்டணம் செலுத்திப் பெறும் வகையில் எளிமையாக பட்டுள்ளது.

இதற்கான இணையதள முகவரி துவக்கம்  செய்யப்பட்டது.

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் திங்கள் கிழமை நடைபெற்ற விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் என்.ரங்கசாமி ஆகியோர் இணையதளத்தை தொடங்கி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.