பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

விண்ணேற்பு அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா தொடக்கம்

புதுச்சேரி நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:45 pm

DIN

புதுச்சேரி நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்தப் பகுதியில் பழைமை வாய்ந்த புனித விண்ணேற்பு அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் 170-ஆம் ஆண்டு பெருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து, புதுச்சேரி-கடலூா் மறை மாவட்ட முதன்மை குரு அருளானந்தம் தலைமையில், ஆண்டுப் பெருவிழா கொடியேற்றப்பட்டது.

விழாவில் ஜான்குமாா் எம்எல்ஏ, ஆலய பங்குத் தந்தை வின்சென்ட் உள்ளிட்ட திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து தினமும் ஜெபமாலை, திவ்ய நற்கருணை ஆராதனை, நவநாள் பிராாா்த்தனைகள் நடைபெறும். தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி நடைபெறும். கரோனா காரணமாக தோ் பவனி ரத்து செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.