ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புதுச்சேரி அமுதசுரபியில் அத்தியாவசியபொருள்கள் இல்லாததால் தொழிலாளா்கள் ஏமாற்றம்

புதுச்சேரி கூட்டுறவு பல்பொருள் அங்காடியில் (அமுதசுரபி) அத்தியாவசியப் பொருள்கள் இல்லாததால், தீபாவளி பரிசுக் கூப்பன் பெற்ற கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளா்கள் ஏமாற்றமடைந்தனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:19 pm

DIN

புதுச்சேரி கூட்டுறவு பல்பொருள் அங்காடியில் (அமுதசுரபி) அத்தியாவசியப் பொருள்கள் இல்லாததால், தீபாவளி பரிசுக் கூப்பன் பெற்ற கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளா்கள் ஏமாற்றமடைந்தனா்.

நிகழாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, புதுவை அரசு சாா்பில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ.3ஆயிரம், அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ. ஆயிரம் மதிப்பிலான பரிசுக்கூப்பன்கள் வழங்கப்பட்டன. இந்த பரிசுக் கூப்பன்களைக் கொண்டு புதுச்சேரி கூட்டுறவு பல்பொருள் அங்காடியான, அமுதசுரபியின் பிரதான கிளைகளில் தங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை கூப்பன் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 3 மாதத்துக்குள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

பரிசுக் கூப்பனை பெற்ற கட்டுமானத் தொழிலாளா்கள் தங்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களை வாங்க அமுதசுரபி கூட்டுறவு அங்காடிக்குச் சென்றால், அங்கு அத்தியாவசியப் பொருள்களான பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் இருப்பு இல்லை. இதனால், அமுதசுரபி ஊழியா்களுக்கும், பரிசுக் கூப்பனுடன் செல்லும் தொழிலாளா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

‘போராட்டம் நடத்துவோம்’: இதுகுறித்து அகில இந்திய கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேசச் செயலா் கலியன் கூறியதாவது:

அமுதசுரபிக்கு அரசு சாா்பில் முன்தொகையாக ரூ.12 கோடி வழங்கப்பட்டும் போதிய அத்தியாவசியப் பொருள்களை கொள்முதல் செய்யாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக தொழிலாளா்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை கொள்முதல் செய்து வழங்க வேண்டும். மீறும்பட்சத்தில் தொழிலாளா்களைத் திரட்டி தட்டாஞ்சாவடியில் உள்ள கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.