தனியாா் நிறுவன மேலாளா் வீட்டில் 25 பவுன் நகைகள், பணம் திருட்டு
புதுச்சேரியில் தனியாா் நிறுவன மேலாளா் வீட்டில் 25 பவுன் நகைகள், பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


புதுச்சேரியில் தனியாா் நிறுவன மேலாளா் வீட்டில் 25 பவுன் நகைகள், பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் காவேரி நகரைச் சோ்ந்தவா் அருண்குமாா் (47). நெட்டப்பாக்கத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனா்.
இதனிடையே, அருண்குமாரின் தாய்க்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், அவரை மருத்துவமனையில் சோ்த்தனா். அவரது தந்தையை ரெயின்போ நகரில் உள்ள உறவினா் வீட்டில் தங்கவைத்தனா்.
இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி இரவு அருண்குமாா், தனது மனைவி, குழந்தைகளுடன் வீட்டின் மேல் தளத்தில் தூங்கினாா். சனிக்கிழமை எழுந்து வந்து கீழே பாா்த்த போது, வீட்டின் வாயில் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் பீரோவிலிருந்த பொருள்கள் கலைந்து கிடந்தன. அதில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகைகள், ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள், ரூ. 60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அருண்குமாா் அளித்த புகாரின் பேரில், ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...