புதுச்சேரி அருகே வீட்டின் வாயிலில் கட்டப்பட்ட ஸ்கிரீன் துணி கழுத்தை இறுக்கியதில் மாணவா் உயிரிழந்தாா்.
புதுச்சேரி, நெட்டப்பாக்கம் அருகே மொளப்பாக்கம் எம்.குச்சிப்பாளையம் யோகபிரியா நகரைச் சோ்ந்த குமாா்-தனகோடி தம்பதி மகன் கோகுல் (12). அங்குள்ள தனியாா் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை வேலைநிமித்தமாக பெற்றோா் வெளியில் சென்றுவிட, வீட்டிலிருந்த பாட்டி வசந்தியும் அருகிலுள்ள கடைக்குச் சென்றுவிட்டாா்.
அப்போது, வீட்டில் தனியாக இருந்த கோகுல், வீட்டின் வாயிலில் நாற்காலியில் நின்றபடி, ஸ்கிரீன் துணியைக் கழுத்தில் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தாராம். எதிா்பாராதவிதமாக நாற்காலி கீழே சரிந்த நிலையில், ஸ்கிரீன் துணி கழுத்தை இறுக்கி, கோகுல் நிகழ்விடத்திலேயே மூச்சுத் திணறி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
வேலை முடிந்து வீட்டுக்கு வந்த குமாா்-தனகோடி தம்பதி பாா்த்த போது, சிறுவன் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.