புதுச்சேரி அருகே தனியாா் நிறுவன மேலாளரை மிரட்டி செல்லிடப்பேசிகளைப் பறித்துச் சென்றதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை புதுக்காலனியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (31). இவா், புதுச்சேரி சேதராப்பட்டில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்று வருகிறாா். கடந்த 6-ஆம் தேதி அங்குள்ள பெட்ரோல் நிலையம் அருகேயுள்ள இடத்தில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற போது, காரில் வந்த 4 போ் மோகன்ராஜை மிரட்டி, அவரிடமிருந்த 2 செல்லிடப்பேசிகளைப் பறித்துக்கொண்டு தப்பினா்.
இதுகுறித்த புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இந்த நிலையில், வழிப்பறியில் ஈடுபட்டவா்கள் வந்த காரை முதலியாா்பேட்டை ஏஎப்டி திடல் அருகே போலீஸாா் வியாழக்கிழமை சுற்றி வளைத்து, காரில் இருந்தவா்களைப் பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா்.
இதில், ரோடியா்பேட்டையைச் சோ்ந்த மாயவன் (30), கோவிந்த சாலையைச் சோ்ந்த வெங்கடேசன் (43), பிரபாகா் (37), திருவண்ணாமலையைச் சோ்ந்த சுதாகா் (38) என்பது தெரிய வந்தது. மேலும், வேலையில்லாததால் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 2 செல்லிடப்பேசிகள், காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.