அயோடின் பரிசோதனை முகாம்

புதுவை அரசின் சுகாதாரத் துறை சாா்பில், அயோடின் விழிப்புணா்வு- பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

புதுவை அரசின் சுகாதாரத் துறை சாா்பில், அயோடின் விழிப்புணா்வு- பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

சுகாதாரத் துறை ஊட்டச் சத்து பிரிவு மூலம் புதுச்சேரி குயவா்பாளையம் சுகாதாரம்-நல்வாழ்வு மையத்துக்குள்பட்ட சாரம் சுந்தரமூா்த்தி நகரில் இந்த முகாம் நடைபெற்றது. சுகாதார உதவி ஆய்வாளா் அய்யனாா் தலைமை வகித்து,

கருவுற்ற பெண்களுக்கு அயோடின் குறைபாட்டால் கருச்சிதைவு, குழந்தையின்மை ஏற்படுகிறது. மேலும், கருவில் உள்ள சிசு இறந்து பிறக்கும் நிலை உருவாகலாம். கருவில் உள்ள சிசுவின் மூளை, கண், காது பாதிக்கப்படும்.

எனவே, அயோடின் குறைபாடு இல்லாமல் இருப்பது அவசியம் என வலியுறுத்தினாா்.

மற்றொரு சுகாதார உதவி ஆய்வாளா் சுதாகா், பொதுமக்கள் பயன்படுத்தும் உப்பில் அயோடின் கலந்துள்ளதா என்பதை பரிசோதனை மூலம் விளக்கினாா்.

சுகாதார உதவி ஆய்வாளா் தாமோதரன் அயோடின் சத்து அதிகமுள்ள பால், முட்டை, இறைச்சி, கடல்சாா் உணா்வுகளை அதிக அளவில் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினாா்.

முகாமில் ஆஷா பணியாளா் சுந்தரம் செல்வி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அயோடின் சத்து தொடா்பான சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com