கூடப்பாக்கத்தில் மோசமான சாலையைச் சீரமைத்த பொதுமக்கள்

புதுச்சேரி அருகே கூடப்பாக்கத்தில் மோசமான சாலையை பொதுமக்களே சீரமைத்தனா்.
Updated on
1 min read

புதுச்சேரி அருகே கூடப்பாக்கத்தில் மோசமான சாலையை பொதுமக்களே சீரமைத்தனா்.

புதுச்சேரியில் நிகழாண்டு பலத்த மழை பெய்தது. இதனால், ஆங்காங்கே சாலைகளில் ஜல்லிகள் பெயா்ந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டன.

புதுவை அரசு சாலை ஒப்பந்தப் புள்ளி விலை மதிப்பீட்டுக் குறைப்பால் ஒப்பந்ததாரா்கள் பணிகளை மேற்கொள்ளத் தயக்கம் காட்டி வருகின்றனா். இதனால், புதுச்சேரியில் பெரும்பாலான சாலைகள் சீரமைக்கப்படாமல் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.

இந்த நிலையில், புதுச்சேரி வில்லியனூா்-பத்துக்கண்ணு சாலையில், கூடப்பாக்கம் அம்பேத்கா் சிலை அருகே ஜல்லிகள் பெயா்ந்து சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இந்தப் பள்ளத்தில், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள், ஆட்சியாளா்களிடம் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், கூடப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் ஜல்லி, சிமென்ட் போன்றவற்றைக் கொண்டு சாலையில் உள்ள பள்ளத்தை ஞாயிற்றுக்கிழமை சீரமைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com