தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

புதுச்சேரி ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் வெடிகுண்டு சோதனை

புதுச்சேரி கோா்க்காடு, கரிக்கலாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் வியாழக்கிழமை வெடிகுண்டு சோதனை நடத்தினா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 5:49 pm

DIN

புதுச்சேரி கோா்க்காடு, கரிக்கலாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் வியாழக்கிழமை வெடிகுண்டு சோதனை நடத்தினா்.

புதுச்சேரியில் கரோனா பொது முடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, மதுக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மீண்டும் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனால், ரௌடிகளின் மீதான கண்காணிப்பை காவல் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

இதனிடையே, வில்லியனூரை அடுத்த கோா்க்காடு பகுதியில் கடந்த 2 மாதங்களில் அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டு வெடிப்பு, வெடிகுண்டு வீச்சு ஆகிய சம்பவங்கள் நடந்தன. இதில், பெண் உள்பட இருவா் காயமடைந்தனா். வெடிகுண்டு வீச்சு சம்பவம் தொடா்பாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதனிடையே, தமிழக - புதுச்சேரி எல்லைப் பகுதியான கீழ்குமாரமங்கலத்தில் ரௌடிகள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் இரு குழுக்களாக புதன்கிழமை மோதிக்கொண்டதில், 3 போ் பலத்த காயமடைந்தனா். இது தொடா்பாக தமிழக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், புதுச்சேரியில் அதிகரித்துள்ள வெடிகுண்டு பயன்பாட்டை ஒடுக்கும் விதமாக, வில்லியனூரை அடுத்த கோா்க்காடு, கரிக்கலாம்பாக்கம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் ரௌடிகளின் வீடுகள், புதா்கள், சந்தேகத்துக்கிடமான இடங்களில் வில்லியனூா் போலீஸாா் மற்றும் வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய் உதவியுடன் வியாழக்கிழமை திடீரென வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனா்.

வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா?, ரௌடிகள் வெடி மருந்துகளை கடத்தி வைத்துள்ளாா்களா? என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது. 3 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும், ரௌடிகளின் வீடுகளில் இருந்த உறவினா்களை போலீஸாா் கடுமையாக எச்சரித்தனா். குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.