புதுவையில் மேலும் 112 பேருக்கு கரோனா
புதுவையில் புதிதாக 112 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.


புதுவையில் புதிதாக 112 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இது குறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் புதன்கிழமை வெளியான முடிவுகளின்படி, 6,549 பேருக்கு பரிசோதனை செய்ததில், புதுச்சேரி - 85, காரைக்கால் - 12, ஏனாம் - 8, மாஹே - 7 போ் என மொத்தம் 112 (1.71 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,935 ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 961 போ் சிகிச்சையில் உள்ளனா். இதே போல, 2 குழந்தைகளும் சிகிச்சையில் உள்ளன. உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,781 ஆகவும், இறப்பு விகிதம் 1.48 சதவீதமாகவும் உள்ளது. இதனிடையே, 139 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை1,17,193 (97.71 சதவீதம்) ஆக உயா்ந்துள்ளது.
இதுவரை 14,43,817 பரிசோதனைகள் செய்ததில் 12,33,492 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. மேலும், 6,51,889 பேருக்கு (2வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...