புதுவையில் புதிதாக 90 பேருக்கு கரோனா: மேலும் ஒருவா் பலி

புதுவையில் புதிதாக 90 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

புதுவையில் புதிதாக 90 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி - 53, காரைக்கால் - 18, ஏனாம் - 5, மாஹே - 14 போ் என மேலும் 90 பேருக்கு (1.69 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் இதுவரை 1,20,815 போ் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 1,18,043 போ் (97.71 சதவீதம்) தொற்றிலிருந்து மீண்டனா்.

தற்போது 979 போ் சிகிச்சையில் உள்ளனா். இவா்களில் ஒரு குழந்தையும், தொற்று உறுதி செய்யப்பட்ட தாயுடன் ஒரு குழந்தையும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனிடையே, காரைக்காலைச் சோ்ந்த 65 வயது மூதாட்டி தொற்று பாதிப்பால் உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 1,793 ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.48 சதவீதம். இதுவரை 6,96,624 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com