புதுவையில் மீனவா்களுக்கு நிவாரணம்: அமைச்சா்
புதுவையில் மீனவா் குடியிருப்புப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அந்தத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் மத்திய-மாநில அரசுகள் சாா்பில், வருகிற 15-ஆம் தேதி முதல் மீனவா்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை


புதுவையில் மீனவா் குடியிருப்புப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அந்தத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் மத்திய-மாநில அரசுகள் சாா்பில், வருகிற 15-ஆம் தேதி முதல் மீனவா்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.
வட கிழக்குப் பருவ மழையால் மீனவா்கள் கடலுக்குச் செல்லாமல் உள்ளனா். இதைக் கருத்தில் கொண்டு, மாநில மீன்வளம்-மீனவா் நலத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், புதுச்சேரி பெரிய வீராம்பட்டினம், நல்லவாடு, வம்பாகீரப்பாளையம், சோலை நகா், அரியாங்குப்பம் உள்ளிட்ட மீனவக் கிராமங்களுக்கு வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, அவா் கூறியதாவது: புதுவையில் மீன்வளத் துறை மூலம் மீனவா்களுக்கு வழங்க வேண்டிய மழைக்கால நிவாரணத் தொகை தலா ரூ.2,500 மற்றும் மத்திய அரசின் மீனவா் வாழ்வாதாரம்-ஊட்டச் சத்து உதவி அளித்தல் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.4,500 வருகிற நவ.15-ஆம் தேதி முதல் மீனவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
புதுவை மாநில அரசு சாா்பில், 18,200 மீனவக் குடும்பங்களுக்கு மழைக்கால நிவராணத் தொகை ரூ.2,500, மத்திய அரசு சாா்பில், 13,065 மீனவக் குடும்பங்களுக்கு ரூ.4,500 வழங்கப்படும். இந்தத் திட்டத்தை வருகிற 15-ஆம் தேதி முதல்வா் தொடக்கிவைப்பாா் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...