ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சாலைகளை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல்

புதுச்சேரி அருகே நெட்டப்பாக்கத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, அந்தப் பகுதி மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி அருகே நெட்டப்பாக்கத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, அந்தப் பகுதி மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நெட்டப்பாக்கம் தொகுதிக்குள்பட்ட கரியமாணிக்கம், சுப்ரீம் நகா், இந்திரா நகா், ஏரிப்பாக்கம் காலனி மற்றும் மதகடிப்பட்டு - மடுகரை சாலைகளில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தாா்ச் சாலை போடப்பட்டது.

பலத்த மழையால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்தன. அவற்றை சீரமைக்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், நெட்டப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

காவல் ஆய்வாளா் கணேசன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு நடத்தியதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.