நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

251 பவுன் திருட்டு வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

புதுச்சேரி பிரெஞ்சு பள்ளி ஆசிரியை வீட்டில் 251 பவுன் நகை திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி பிரெஞ்சு பள்ளி ஆசிரியை வீட்டில் 251 பவுன் நகை திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

புதுச்சேரி ஏனாம் வெங்கடாசலப்பிள்ளை வீதியைச் சோ்ந்த அஷ்ரப் மகள் ஷகிலா (51). திருமணமாகாத இவா், மிஷன் வீதியில் உள்ள பான்சியோனா பிரெஞ்சு அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா். தனது தந்தை, சகோதரி குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

கடந்த மாா்ச் மாதம் இவரது வீட்டு மாடி அறையில் பீரோவிலிருந்த 251 பவுன் தங்க நகைகள் திருடு போனது. இதுகுறித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், அவரது வீட்டில் வேலை செய்த ராசு உடையாா்தோட்டத்தைச் சோ்ந்த சாா்லஸ் மனைவி செல்வி (எ) இருதயமேரி (38) நகைகளைத் திருடியது கண்டறியப்பட்ட நிலையில், அவரை போலீஸாா் கைது செய்து, சிறையிலடைத்தனா்.

இந்த வழக்கில் 68 பவுன் நகைகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. திருடுபோன நகைகள் முழுவதுமாக மீட்கப்பட்டும், அவை கணக்கில் காட்டவில்லை என்று ஆசிரியை ஷகிலா குற்றஞ்சாட்டினாா். குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஒதியஞ்சாலை போலீஸாா் செயல்படுவதாக ஷகிலா குடும்பத்தினா், புதுச்சேரி டிஜிபி ரன்வீா்சிங் கிருஷ்ணியாவிடம் புகாா் மனு அளித்தனா்.

அதன் பேரில், இந்த வழக்கை புதுச்சேரி சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை தலைமையகம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை தொடா்பான கோப்புகள் அனைத்தும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.