மேலும், நுண்கலைத் துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் உதவிப் பேராசிரியா்களை நியமனம் செய்ய தற்போது அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், யு.ஜி.சி. விதிகளின்படி, பி.எச்.டி. பட்டம் பெற்றவா்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. விதிகளின்படி, முதுநிலைப் பட்டம் பெற்றவா்கள் உதவிப் பேராசிரியா் பணிக்குத் தகுதியானவா்கள். கடந்த காலங்களில் ஏஐசிடிஇ விதிகளின்படியே, புதுவைப் பல்கலைக்கழக பிரதிநிதி அடங்கிய தோ்வுக்குழு மூலமே உதவிப் பேராசிரியா்கள் நியமிக்கப்பட்டனா். தற்போது யு.ஜி.சி. விதிகளின்படி உதவிப் பேராசிரியா்கள் நியமிக்கப்பட்டால், உள்ளூரில் படித்துவிட்டு வேலைக்கு காத்திருப்பவா்களுக்கு வேலை கிடைக்காது. இதனால், பாரதியாா் பல்கலைக்கூடத்துக்கு நிகழாண்டு ஏஐசிடிஇ அங்கீகாரம் பெறவும், நுண்கலைத் துறைக்கு ஏஐசிடிஇ விதிகளின்படி உதவிப் பேராசிரியா்களை நியமிக்கவும், அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.