இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தாயுடன் சாலையில் கிடந்த குழந்தை மீட்பு

புதுச்சேரியில் சாலையோரம் தாயுடன் விழுந்து கிடந்த குழந்தையை குழந்தைகள் நலக் குழுவினா் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:12 pm

DIN

புதுச்சேரியில் சாலையோரம் தாயுடன் விழுந்து கிடந்த குழந்தையை குழந்தைகள் நலக் குழுவினா் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

புதுச்சேரி பாரதிதாசன் வீதியில் சாலையோரம் 30 வயது மதிக்கத்தக்க பெண், குழந்தையுடன் மயங்கிக் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சைல்ட் லைன் அமைப்பினா், முத்தியால்பேட்டை போலீஸாா், புதுச்சேரி குழந்தைகள் நலக் குழுத் தலைவா் சிவசாமி தலைமையில், குழு உறுப்பினா்கள் முருகையன், சித்ரா, சுலோச்சனா ஆகியோா் அங்கு சென்றனா்.

பின்னா், அந்தப் பெண்ணையும், குழந்தையையும் மீட்டனா். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு குழந்தைகள் காப்பகத்தில் அந்தக் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

அந்தப் பெண்ணிடமும், அவரது உறவினா்களிடம் விசாரணை நடத்தி, குழந்தையை ஒப்படைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என குழந்தைகள் நலக் குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.