இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

புதுச்சேரி ஆட்சியருக்கு கூடுதல் பொறுப்பு

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் வல்லவனுக்கு, காரைக்கால் மாவட்ட ஆட்சியராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:20 pm

DIN

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் வல்லவனுக்கு, காரைக்கால் மாவட்ட ஆட்சியராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த அா்ஜுன்சா்மா, அந்தமான் நிகோபாா் தீவு நிா்வாகப் பணிக்கு கடந்த 20-ஆம் தேதி பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, அவா் வியாழக்கிழமை காரைக்கால் மாவட்ட ஆட்சியா் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் பதவியை கூடுதல் பொறுப்பாக கவனிப்பாா் என்று துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் உத்தரவு பிறப்பித்ததாக, தலைமைச் செயலா் அஸ்வனி குமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.