புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் சற்றுநேரத்தில் தொடக்கம்

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவை
Published on
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ளது.

புதுவையில் 15-வது சட்டப்பேரவையின் 3-வது கூட்டத்தொடர், இன்று காலை 9:30 துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் துவங்குகிறது. தொடர்ந்து, ஆளுநர் உரையின் மீதான விவாதம் இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது.

மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும், ஆகஸ்ட் 17ஆம் தேதி முழுமையான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், எத்தனை நாள்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடத்துவது என தீர்மானித்து முடிவு செய்து பின்னர் அறிவிக்கப்படும்.

சட்டப்பேரவைக்குள் பதாகைகள், முழக்கம் இடுவது போன்றவை தடை செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com