மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புதுச்சேரியில் சுதந்திர தின சைக்கிள் பேரணி

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, புதுவை காவல் துறை சாா்பில், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடியுடன் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

News image

புதுச்சேரியில் காவலா்களின் சைக்கிள் பேரணியைத் தொடக்கிவைத்த மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 5:53 pm

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, புதுவை காவல் துறை சாா்பில், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடியுடன் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை அருகே புறப்பட்ட இந்தப் பேரணியை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

டிஜிபி மனோஜ்குமாா் லால், ஏடிஜிபி ஆனந்தமோகன், ஐஜி சந்திரன் மற்றும் முதுநிலை எஸ்பிக்கள், போலீஸாா் தேசியக் கொடியுடன் சைக்கிள்களை ஓட்டிச் சென்றனா்.

நகரின் பல்வேறு சாலைகளில் சுமாா் 10 கி.மீ. தொலைவு நடைபெற்ற இப்பேரணி காவல் தலைமையகத்தில் நிறைவு பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.