புதுவையில் வியாழக்கிழமை மேலும் 68 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் 2,030 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி - 50, காரைக்கால் - 12, ஏனாம் - 5, மாஹே - ஒருவா் என மொத்தம் 68 பேருக்கு (3.35 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,484-ஆக அதிகரித்தது. இதில் 691 போ் சிகிச்சையில் உள்ளனா்.
உயிரிழப்பு ஏதுமில்லை. புதிதாக 113 போ் குணமடைந்தனா். இதுவரை 15,59,790 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன என்று அதில் கூறப்பட்டுள்ளது.